Monday, February 13, 2017

சசியை அழைக்காதீர்: கவர்னருக்கு மக்கள் மனு




சென்னை: 'சசிகலாவுக்கு, நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை' என, கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு, பொதுமக்கள் மனு அனுப்பி வருகின்றனர்.

ஆதரவு:

அ.தி.மு.க., பொதுச்செயலராக நியமனம் செய்யப்பட்ட சசிகலாவை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், சசிகலாவுக்கு எதிராக, முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

முயற்சி:

எனினும் கடும் எதிர்ப்பை மீறி, எம்.எல்.ஏ.,க்கள் உதவியோடு, முதல்வராக சசிகலா முயற்சித்து வருகிறார். தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி, கவர்னரை வற்புறுத்தி வருகிறார். அவர் வசமுள்ள, எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, பொது மக்கள் திரண்டுள்ளனர். 'சசிகலாவுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது' என, தங்கள் தொகுதி, எம்.எல்.ஏ.,க் களை, வலியுறுத்தி வருகின்றனர்.

'பேக்ஸ்':

அடுத்த கட்டமாக, 'ஜனநாயகம் கடத்தப்பட்டுள்ளது; நாங்கள் சசிகலாவுக்கு ஆதரவு அளிக்கவில்லை. எனவே, அவரை ஆட்சி அமைக்க அழைக்கக் கூடாது' என, கையெழுத்திட்ட மனுவை, கவர்னர் அலுவலகத்திற்கு, பொதுமக்கள், 'பேக்ஸ்' அனுப்பி வருகின்றனர். அதன் நகலை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, '044 - 2230 1300 என்ற எண்ணுக்கு பேக்ஸ் அனுப்புங்கள்' என, வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று மட்டும், கவர்னர் மாளிகைக்கு, ஆயிரக்கணக்கானோர் பேக்ஸ் அனுப்பி உள்ளனர்.

No comments:

Post a Comment

Self-financing medical, dental college fee details released

Self-financing medical, dental college fee details released The Hindu Bureau Chennai. 16.08.2026 Tamil Nadu’s Selection Committee has put up...