Saturday, February 11, 2017

சசி வழக்கில் தீர்ப்பு எப்போது?

புதுடில்லி: அதிமுக., பொதுசெயலர் சசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு, அடுத்த வாரத்தின் புதன் அல்லது வியாழ கிழமைகளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்ப்பு:

அதிமுகவின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டும் சசி முதல்வராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓ.பி.எஸ்., அணியில் சேருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னும் எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்..,க்கள் பலர் வருவார்கள் என முதல்வர் ஓ.பி.எஸ்., அணியினர் கூறுகின்றனர்.
ஓபிஎஸ் கரம் வலுத்து வருவதால் சசி அணியினர் கலக்கத்தில் உள்ளனர். இதற்கிடையில் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளிவருவதால் அவரது பதவியேற்புக்கு கவர்னர் அழைப்பு விடுக்ககாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தீர்ப்பு வரும் நாள் நோக்கி கட்சியினரும், அரசு நிர்வாகமும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தீர்ப்பை அறிவிக்கும் சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் லிஸ்ட்டில், இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் வரும் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025