Friday, February 17, 2017

கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்க வைப்பு? - சமாதான முயற்சியில் அதிமுக மூத்த நிர்வாகிகள்


முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் செங்கோட்டை யன் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா வில் கலந்து கொள்ளாமல் கூவத்தூர் விடுதியிலேயே தங்கியதாக அதிமுக வட்டாரங் களில் கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக் கம் அடுத்த கூவத்தூரில் கடற் கரையோரம் உள்ள தனியார் சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலா தரப்பின ரால் கடந்த 8 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலை யில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதை அடுத்து, முதலமைச்சராக எடப்பாடி பழனி சாமி பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில், எடப்பாடி பழனி சாமி முதல்வராகவும், அதிமுக துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்வு செய்யப் பட்டதற்கு, கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த எம்எல்ஏக்கள் மத்தி யில் அதிருப்தி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், 18 எம்எல்ஏக்கள் மட்டும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படாமல் விடுதியில் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அனைத்து எம்எல்ஏக்களும் சென்னை சென்ற பின்னரும் கூட, கூவத்தூர் விடுதியின் உள்ளே செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. எம்எல்ஏக் கள் அனைவரும் சென்னை சென்று விட்டதாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிமுகவினர் கூறி னர். எனினும், பெண் எம்எல்ஏக் களின் கணவர்கள் அவர்களுக்கு தேவையான உடமைகளை விடுதிக் குள் எடுத்து சென்றனர்.

அமைச்சராக பதவியேற்றுள்ள செங்கோட்டையன் கட்சிக்கு நீண்ட காலமாக பெரும் விசுவாசமாகவும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்றவராக விளங்கினாலும், துணைப் பொதுச் செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியுடன் பதவியேற்றதாக அவரது ஆதரவா ளர் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

சிக்கல் ஏற்படும் நிலை

பதவியேற்ற பிறகு கூவத்தூர் வந்த செங்கோட்டையன், செய்தி யாளர்களைச் சந்தித்தபோது, எந்த விதமான மகிழ்ச்சியையும் வெளிப் படுத்தாமல் மவுனமாக விடுதியின் உள்ளே சென்றார். முதல்வர் மற்றும் செங்கோட்டையனின் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்ப தில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளதாக அதிமுக வட்டாரங் களில் கூறப்படுகிறது. இதனி டையே, முதல்வர் மற்றும் செங் கோட்டையன் ஆதரவாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...