Monday, September 25, 2017

அந்த பொய்யை சொல்ல சொன்னது யார்?- திண்டுக்கல் சீனிவாசனுக்கு தீபா கேள்வி

Published : 24 Sep 2017 16:24 IST

BHARATHI PARASURAMAN_50119




'ஜெயலலிதா இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை. நாங்கள் சொன்னது எல்லாம் பொய். பொதுமக்கள் எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய நிலையில் 'அந்த பொய்யை சொல்ல சொன்னது யார்?' என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவர் தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை போயஸ்கார்டனில் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த தீபா இவ்வாறு கூறினார்.


தீபா பேசியதாவது:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர்கள் காலம் கடந்து பல கருத்துக்களை கூறி வருகிறார்கள். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பொய் சொன்னதாக கூறி இருக்கிறார். அந்த பொய்யை சொல்ல சொன்னது யார்? என்பது பற்றி முழு உண்மைகளையும் வெளியிட வேண்டும்.

ஜெயலலிதா மரணத்தை பொறுத்தவரை சசிகலா குடும்பத்தினர் மீது நானும் குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறேன். அவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால் அச்சமின்றி துணிந்து வெளியிடட்டும். புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் இருந்திருந்தால் டி.டி.வி. தினகரன் முன்கூட்டியே வெளியிட்டிருக்கலாமே.

அவர்கள் ஆதாரங்களை வெளியிட்டாலும் வெளியிடாவிட்டாலும் நான் வழக்கு தொடர்வது உறுதி. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த பிரதமரிடம் கோரி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 06.06.2026