Tuesday, September 5, 2017

மருத்துவ கல்லூரி பூமி பூஜை கலெக்டர் பங்கேற்காமல் தவிர்ப்பு
பதிவு செய்த நாள்05செப்
2017
01:02

கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி பூமி பூஜையில், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்காமல் தவிர்த்தனர்.

நீண்ட இழுபறிக்கு பின், கரூர், சணப்பிரட்டியில் மருத்துவ கல்லுாரி அமைக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று சணப்பிரட்டியில், பூமி பூஜை நடந்து. இதில், கலெக்டர் கோவிந்தராஜ் உட்பட, அரசு அதிகாரிகள் பங்கேற்கவில்லை. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று கரூரில் இருந்த போதும், அவரும் பூஜையில் பங்கேற்றவில்லை.

கரூர், எம்.பி.,யும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரையிடம் கேட்டபோது, “நகரின் மையப் பகுதியாக இருக்க வேண்டும் என்பதால், சணப்பிரட்டிக்கு இடம் மாற்றப்பட்டது. இதற்கு அரசு ஆணை வெளியிட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது. அவசர வேலை காரண மாக, அமைச்சர் விஜயபாஸ்கர் சென்று விட்டார். ஒப்பந்ததாரர் மற்றும் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சி என்பதால், அதிகாரிகள் பங்கேற்கவில்லை,” என்றார்.

No comments:

Post a Comment

Why are 4000 rotis made every day at Mukesh Ambani’s house?

Why are 4000 rotis made every day at Mukesh Ambani’s house? Check daily menu at Antilia Mukesh Ambani’s home prepares around 4,000 rotis eve...