Thursday, September 14, 2017

'வங்கி துறையில் 5 ஆண்டுகளில் 30 சதவீத வேலை இழப்பு ஏற்படும்'

பதிவு செய்த நாள்13செப்
2017
22:44


புதுடில்லி: 'இயந்திரமயமாக்கல் அதிகரிப்பால், வங்கித் துறையில், அடுத்த,
ஐந்தாண்டுகளில், 30 சதவீதம் வரை வேலை இழப்பு ஏற்படும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிட்டி குரூப் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல்
அதிகாரி, விக்ரம் பண்டிட், ஓரிகான் என்ற முதலீட்டு நிறுவனத்தை துவக்கியுள்ளார். 

சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது:

இயந்திரமயமாக்கல் மற்றும் செயற்கை அறிவு
சார் மேம்பாட்டால், தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. பலர் வேலையை இழக்க நேர்ந்தது. தற்போது தான், அந்தத் துறை, அதில் இருந்து மீண்டு வருகிறது.

வங்கி சேவையில், இயந்திரமயமாக்கல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளால், வங்கிகளின் செயல்பாடுகளில் புதிய மாற்றங்கள் ஏற்படும். பொறுப்புகள் மைய அலுவலகத்தில் குவிக்கப்படாமல், பகிர்ந்து அளிக்கப்படும்.
'பேக் ஆபிஸ்' எனப்படும், பின்புல பணிகள் எல்லாம் கணினி
மயமாகி விடும். இதுபோன்று பல முன்னேற்றங்கள் ஏற்படுவதால், வங்கித் துறையில், அடுத்த, ஐந்து ஆண்டுகளில், 30 சதவீதம் வரை வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 04.06.2026