Tuesday, September 26, 2017

சட்டீஸ்கர் விவசாயிக்கு ரூ.76.73 கோடிக்கு மின்கட்டணம்
பதிவு செய்த நாள்25செப்
2017
16:16




ரூ.,76 கோடி மின்கட்டணம்; விவசாயி அதிர்ச்சி

ராய்பூர் : சட்டீஸ்கர் மாநிலம் மகாசமுத் மாவட்டத்தில் விவசாயி ராம் பிரசாத் என்பவருக்கு செப்டம்பர் மாத மின்கட்டணமாக ரூ.76.73 கோடி செலுத்தும்படி பில் அனுப்பப்பட்டுள்ளது. 

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி ராம் பிரசாத், மின்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். இது தொழிற்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட தவறு என கூறி, சரியான மின்கட்டண தொகையான ரூ.1820 க்கான பில்லை ராம் பிரசாத்திடம் அதிகாரிகள் அளித்துள்ளனர். அதிலும் முந்தைய மாதத்தில் எப்போது மின்கட்டணம் சரிபார்க்கப்பட்டது என குறிப்பிடவில்லை.

இது குறித்த ராம் பிரசாத் கூறுகையில், இத மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. வீட்டு உபயோகத்திற்காக மட்டுமே நான் மின்சாரம் பயன்படுத்துகிறேன் என்றார். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து இந்த தவறுக்கு காரணமான கிளாக்குகள் இரண்டு பேரை சஸ்பெண்ட் செய்திருப்பதாக மின்துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

விவசாயி ராம் பிரசாத்திற்கு தவறான மின்கட்டண பில் அனுப்பப்பட்ட விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சட்டசபை கூட்டத் தொடரில் எழுப்பின. இது முதல் முறையல்ல எனவும், அந்த மாவட்டத்தை சேர்ந்த பல விவசாயிகளுக்கு ரூ.76 கோடிக்கும் மேலாகவே மின்கட்டணம் செலுத்த பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினர். இதற்கு மின்துறை அலுவலர்களின் கவனக்குறைவே காரணம் என குற்றம்சாட்டி உள்ள எதிர்க்கட்சிகள், அரசின் இந்த அலட்சியத்தை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...