Saturday, September 16, 2017

ரயில் நிலையங்களில் ஏ.டி.எம்.,

பதிவு செய்த நாள்16செப்
2017
00:13

சென்னை : சென்னை ரயில்வே கோட்டத்தில், முக்கிய நிலையங்களில், பயணியரின் வசதிக்காக, வங்கி ஏ.டி.எம்., வைக்க ரயில்வேயால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில், சென்னை சென்ட்ரலில், ஐந்து இடங்களிலும், எழும்பூர், மாம்பலம், தாம்பரம், வில்லிவாக்கம், திருவள்ளூர், அரக்கோணம், காஞ்சிபுரம், பெரம்பூர், செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் நிலையங்களிலும், வங்கி, ஏ.டி.எம்.,கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இது குறித்து, ரயில்வே வர்த்தக பிரிவு அதிகாரி கூறியதாவது: முக்கிய ரயில் நிலையங்களில், வங்கி, ஏ.டி.எம்.,கள் அமைக்க, ஒப்பந்த அடிப்படையில், இடம் ஒதுக்கி கொடுக்கப்படுகிறது. இடவசதி மற்றும் வாடகை விபரங்களும் தெரிவிக்கப்பட்டு, வங்கிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பருக்குள், இந்த நிலையங்களில், ஏ.டி.எம்.,கள், அமைக்க, ஏற்பாடு நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...