பைக்கில் சென்றவருக்கு 'சீட் பெல்ட்' அபராதம்
பதிவு செய்த நாள்25செப்
2017
21:45

தஞ்சாவூர்: பைக்கில் சென்ற வாலிபர், 'சீட் பெல்ட்' அணியவில்லை எனக்கூறி, போலீசார், 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
தஞ்சை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர், விவசாயி பாண்டியராஜன், 29. இவர், 21ம் தேதி, 'பேஷன் புரோ' பைக்கில், பை - பாஸ் சாலையில் வந்தார்.
தஞ்சை தாலுகா போலீசார், பாண்டியராஜன் வாகனத்தை நிறுத்தி, ஆவணங்களை கேட்டுள்ளனர். அவர், அனைத்து ஆவணங்களையும் காட்டிஉள்ளார். மேலும், 'ஹெல்மெட்' அணிந்திருந்தார்.
உடனே போலீசார், அவர் சீட் பெல்ட் அணிந்து வரவில்லை என மிரட்டி, 500 ரூபாய் அபராதம் வசூல் செய்துஉள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த பாண்டியராஜன், நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் அண்ணாதுரையிடம் புகார் அளித்தார்.
பின், பாண்டியராஜன் கூறுகையில், ''பைக்கில் செல்ல, எதற்கு சீட் பெல்ட் என, தெரியவில்லை. பொதுமக்களை மிரட்டி, அபராதம் என்ற பெயரில், வசூல் வேட்டையில் ஈடுபடும் போலீசார், மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன்,'' என்றார்.
பதிவு செய்த நாள்25செப்
2017
21:45
தஞ்சாவூர்: பைக்கில் சென்ற வாலிபர், 'சீட் பெல்ட்' அணியவில்லை எனக்கூறி, போலீசார், 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
தஞ்சை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர், விவசாயி பாண்டியராஜன், 29. இவர், 21ம் தேதி, 'பேஷன் புரோ' பைக்கில், பை - பாஸ் சாலையில் வந்தார்.
தஞ்சை தாலுகா போலீசார், பாண்டியராஜன் வாகனத்தை நிறுத்தி, ஆவணங்களை கேட்டுள்ளனர். அவர், அனைத்து ஆவணங்களையும் காட்டிஉள்ளார். மேலும், 'ஹெல்மெட்' அணிந்திருந்தார்.
உடனே போலீசார், அவர் சீட் பெல்ட் அணிந்து வரவில்லை என மிரட்டி, 500 ரூபாய் அபராதம் வசூல் செய்துஉள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த பாண்டியராஜன், நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் அண்ணாதுரையிடம் புகார் அளித்தார்.
பின், பாண்டியராஜன் கூறுகையில், ''பைக்கில் செல்ல, எதற்கு சீட் பெல்ட் என, தெரியவில்லை. பொதுமக்களை மிரட்டி, அபராதம் என்ற பெயரில், வசூல் வேட்டையில் ஈடுபடும் போலீசார், மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன்,'' என்றார்.
No comments:
Post a Comment