Tuesday, January 31, 2017

முதியோரை பேணுவது இந்திய பண்பாடு'

புதுடில்லி: டில்லியில், 74 வயது மூதாட்டியை துன்புறுத்திய மகனும், மருமகளும், மூதாட்டியின் வீட்டிலிருந்து வெளியேறும்படி, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் வசித்து வரும், கணவரை இழந்த, 74 வயது மூதாட்டி சாந்தி தேவி, மகனும், மருமகளும் தன்னை துன்புறுத்துவதாக, மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, காமினி லா, பிறப்பித்த உத்தரவு: வாழ்க்கை என்பது ஏணி அல்ல; முழுதாய் சுற்றி வரும் சக்கரம். பெற்றோரின் முதுமைக் காலத்தில், அவர்களை பார்த்துக் கொள்ளாவிட்டால், நம் முதுமைக் காலத்தில், நம் குழந்தைகள் நம்மை கவனிக்க மாட்டார்கள் என்பதை மறந்து விடுகிறோம். முதியவர்களை, அவர்களுக்கு உதவி தேவைப்படும் சமயத்தில், பொருளாதார ரீதியில் கைவிடப்படுவதை, நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளாது. பெற்றோரை மதிப்பது, முதியோரை பேணுவது, வளமையான இந்திய கலாசாரம், பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பண்பு. சாந்தி தேவிக்கு சொந்தமான வீட்டில் இருந்து மகனும், மருமகளும் வெளியேற வேண்டும். 2015 அக்டோபர் முதல், அவர்கள் வெளியேறும் வரை, மாதம், 5,000 வீதம், இழப்பீடாக தரப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

1 comment:

  1. வணக்கம் ஐயா!

    நான், பெற்றோரின் நிலையைப் பற்றி ஒரு blog எழுதியிருக்கிறேன்! அதை நீங்கள், ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!

    நான் ஒரு எழுத்தாளனும் அல்ல! எழுதுவது எனது பொழுதுபோக்கும் அல்ல! இதன் மூலம், பணமோ புகழோ அடைவது, எனது பிழைப்போ, நோக்கமோ அல்ல! இருப்பினும் நான் எழுதுவது, சமுதாய மாற்றத்திற்க்காக மட்டுமே!

    www.lusappani.blogspot.in

    ReplyDelete

NEWS TODAY 2.5.2024