Friday, February 10, 2017

முடிவு கவர்னர் கையில் : ராஜ்நாத் பேட்டி

DINAMALAR

புதுடில்லி: தமிழக அரசியல் சூழல் விவகாரத்தில் கவர்னா் தான் முடிவு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் கூறினார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து கவர்னர் வித்யாசாகர் ராவ் தனது அறிக்கையை ஜனாதிபதி, பிரதமர், உள்துறைஅமைச்சகம், அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார்.

ராஜ்நாத் கைவிரிப்பு

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நியூஸ் எக்ஸ் டி.வி.சானலுக்கு அளித்தபேட்டியில், கவர்னர் அறிக்கை மீது மத்திய அரசு முடிவு எடுக்க முடியாது. இந்த விவகாரம் கவர்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆளும் கட்சியினரி் உள்கட்சி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது. இது குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆட்சி அமைக்க அழைப்பது குறித்து கவர்னர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.08.2026